கோவையில் கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கோவையில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கார் மோதி பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சியடையும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை வடகோவை பகுதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.



இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம்போல் வேலைக்காக பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.



அப்போது கென்னடி திரையரங்கு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதி வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர் லீலாவதி மீது மோதியது.



இதில் லீலாவதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பின்னர் அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தை ஏற்படுத்தியவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும் அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவ்விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...