சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்த கார் - சிக்கித் தவித்தவரை பத்திரமாக போலீசார் மீட்டனர்

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், காருக்குள் இருந்த சதீஷை பத்திரமாக மீட்டனர்.


கோவை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை தேவனூர்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவர் நேற்று மாலை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் கதவை திறந்து வாய்கால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்த சதீஸை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.



இதனை தொடர்ந்து போலீசார் சூலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கிரேன் மூலம் வாய்காலில் பாய்ந்து விழுந்து கவிழ்ந்த காரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.



இச்சம்பவம் சுல்தான்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...