குண்டடத்தில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி - எதுவும் சிக்காததால் திருடர்கள் ஏமாற்றம்

குண்டடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடச் சென்ற மர்ம நபர்கள் வீடுகளில் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட முயன்ற மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டடத்தை அடுத்துள்ள சூரியநல்லூர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 75), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. உள்ளே பணம், நகை ஏதும் வைக்கப்படாததால் ஏமாற்றத்துடன் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

இதே போல் சின்னாரிபாளையம் வேலுசாமி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கும் ஏதும் கிடைக்காத நிலையில் உப்பாறு அணை சுண்டமந்தை அருகில் உள்ள நடராஜ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவின் பூட்டையும் உடைத்து அதிலிருந்த துணிமணிகளை எடுத்து வீட்டின் உள் பகுதியில் வீசியிருந்தனர். அங்கும் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.

இது பற்றிய தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...