உடுமலையில் கல்விக் கடன் வழங்க கோரி சென்ட்ரல் பேங்க் முன்பு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

உடுமலையில் மாணவனுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த சென்ட்ரல் வங்கி முன்பு, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: கல்விக் கடன் வழங்காமல் ஒருவடத்திற்கு மேல் அலைக்கழித்துள்ளதால் மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணம நாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்த அமுத பாரதி என்ற மாணவன் கோவை கற்பகம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்விக் கடன் கேட்டு உடுமலையில் உள்ள சென்ட்ரல் வங்கியில் விண்ணப்பித்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் வங்கி நிர்வாகம் இன்று போய் நாளை வா இன்று போய் நாளை வா என தொடர்ந்து அலைக்கழித்துள்ளது.

இதனால் அந்த மாணவன் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.



இந்த நிலையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோருடன் 50க்கும் மேற்பட்டோர் சென்ட்ரல் வங்கியின் முன்பு கல்விக்கடன் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஒரு வருடத்துக்கு மேலாக கல்வி கடன் வழங்காமல் வங்கி நிர்வாகம் மாணவனுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே கல்விக்கடன் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...