ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை - திருடர்களை அதிரடியாக பிடித்த கோவை காவல்துறை

கோவையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 இடங்களில் செயின் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.


கோவை: கோவையில் ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை கோவை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.

கோவையில் ராம்நகர் பகுதியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த பிரசாந்த் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு மர்ம நபர்கள் 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். அச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே நாளில் அடுத்தடுத்து ஒரே மாதிரியான செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் கோவை மாநகர் மற்றும் மாநகர எல்லை பகுதியில் நடைபெற்றது.

இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட தீவிர விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் (23), பார்த்தீபன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.



இதையடுத்து அவர்களிடமிருந்த இரண்டு இருசக்கர வாகனம், லேப்டாப், 54 கிராம் எடையுள்ள 3 செயின்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு காட்டூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சந்தீஸ், கடந்த மாதம் 25ம் தேதி தொடர்ச்சியாக 5 இடங்களில் செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவம் நடைப்பெற்றது. இரண்டு வாகனம் , மற்றும் லேப்டால் திருடப்பட்டு இருந்தது. முகமூடி அணித்து 7 இடங்களில் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடைப்பெற்று இருந்தது. காட்டூர் காவல் நிலையம், ஆர்.எஸ்.புரம், மதுக்கரை, கோவில்பாளையம், சுந்தராபுரம், சரவணம்பட்டி காவல் எல்லைகளில் திருட்டு மற்றும் வழிப்பறி ஈடுப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவரகளை கைது செய்ய 10 பேர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

150 கேமரா சிசிடிவி காட்சிகள் எடுக்கப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தினேஷ், பார்த்திபன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. தனிப்பட்ட செலவுகளுக்காக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இளம் வயதினர் குற்ற வழக்கில் ஈடுபடாமல் இருக்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா மற்றும் மது போதையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. நம்ம கோவை நம்ம பாதுகாப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருகிறோம். 120 கேமரா விரைவில் பொறுத்தப்பட்ட வுள்ளோம். 55 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

தியேட்டர்கள் உரிமையாளர்களிடம் வரக்கூடிய வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளோம். திரைப்பட கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...