கரும்பு, தென்னை பயிர்கள் கருகும் அபாயம் - அமராவதி அணை நீர் திறக்க கோரிக்கை

கரும்பு மற்றும் தென்னை பயிர்களை காப்பாற்ற உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: அமாரவதி அணை தண்ணீர் திறக்கப்படாமல் கரும்பு, தென்னை பயிர்கள் கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் சுமார் 54,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பட்டு வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகின்றன. பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், ஆற்று வழியாக பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகின்றது.

தற்போது புதிய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் அதிக அளவு கரும்பு தென்னை நெல் பயிரிட்டுள்ளனர் இந்த நிலையில் தற்பொழுது போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் கரும்பு தென்னை பயிர்கள் காய்ந்து வருகின்றன மேலும் கால்நடைகளுக்கும் நீர் தேவைப்படுவதால் அமராவதி அணையில் இருந்து 15 நாட்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



தண்ணீர் திறக்க காலதாமதம் ஆனால் கரும்பு, தென்னை, நெல் பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதால் உடனடியாக உயிர்த்தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர் தற்சமயம் அமராவதி அணையில் மொத்த நீர்மட்டம் 90 அடியில் 67 அடியாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....