மாநகராட்சி வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 8 வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசித்து வரும் பிரான்சிஸ் சேவியர், நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.11,010 மற்றும் வார்டு 84-ல் நாடார் தெருவில் வசித்து வரும் ராஜமாணிக்கம் நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.6,862 மற்றும் குடிநீர் கட்டணம் ரூ.27,740 ஆகியவை செலுத்தாததால் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, வார்டு 45-ல் கண்ணுசாமி கவுன்டர் தெருவில் வசிக்கும் சாந்தாமணி நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.15,753, வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசிக்கும் கே.பி.குஞ்ராமன் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.14,815, வார்டு 49-ல் பொங்கியம்மாள் தெருவில் வசிக்கும் மனோரஞ்சிதம் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.9,397 ஆகியவற்றை செலுத்தாததாலும், வார்டு 53-ல் தனலட்சுமி நகரில் வசிக்கும் என்.பழனிச்சாமி குடிநீர் கட்டணம் ரூ.8,489, வார்டு 53-ல் ஆவாரம்பாளையம் சாலையில் வசிக்கும் வேணுகோபால் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.4,366 மற்றும் வார்டு 54-ல் விவேகானந்தா சாலையில் வசிக்கும் சேமியல் நாடார் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.5,220 ஆகிய வரிதாரர்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கியும், வரிகள் செலுத்தாத காரணத்தினால் மேற்படி வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...