தாராபுரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு மாரத்தான் - ஏராளமானோர் பங்கேற்றனர்

தாராபுரம் உட்கோட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் வேக நடை போட்டி நடைபெற்றது.


திருப்பூர்: தாரபுரத்தில் நடைபெற்ற தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை தாராபுரம் உட்கோட்டம் சார்பில் மினி மராத்தான் வேக நடை போட்டி நடைபெறறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். மினி மராத்தான் போட்டியை போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் தொடங்கி வைத்தார். அதில் வேக நடை போட்டி 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. வேக நடை போட்டி தாராபுரம் காவல் நிலையம் முன்பு தொடங்கி பூக்கடை கார்னர், ஐந்து சாலை சந்திப்பு, அரசு மருத்துவ மனை, தாசில்தார் அலுவலகம் வழியாக காவல் நிலையம் வந்து அடைந்தனர்.



இந்த போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 அறிவிக்கப்பட்டது. அதே போன்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.2000, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாவது பரிசு ரூ. 500 அறிவிக்கப்பட்டது. அத்தடன் மேலும் இரண்டு பிரிவுகளிலும் முதல் பத்து இடங்களை பிடிப்பவர்களுக்கு மெடல் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர். இந்த போட்டியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

16 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் அகரம் பள்ளியை சேர்ந்த மாணவர் ஹரிஹரன், ஹரி சரண், தீபக் ஆகியோர் முதல் மூன்று இடஙகளை பிடித்தனர். அடுத்து 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில். முகமது வாசர் மற்றும் அம்ருத், முகமது தபிக் மற்றும் நவீன் ராஜ், போல்ராம் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் இரண்டு பிரிவுகளலும் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...