தாராபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை பணி - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


கோவை: நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

தாராபுரம் நகராட்சி 4-வது வார்டு பகுதியில் பல ஆண்டு காலமாக மக்கள் சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என அவர் கூறினார்.

அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராஜாத்தி பாண்டியன், 4-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன், வார்டு அவைத்தலைவர் சென்னியப்பன், வார்டு பிரதிநிதிகள் ஆறுச்சாமி, மகாலட்சுமிரத்தினம், வாக்குச்சாவடி முகவர் குணசேகரன், பெரியசாமி, பாலகிருஷ்ணன், முனியப்பன், ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...