உடுமலையில் வானவியல் சார் பயிற்சி பட்டறை - சூரிய குடும்பம் பற்றி மாணவர்களுக்கு விளக்கம்

உடுமலையில் நடைபெற்ற வானவியல் சார் பயிற்சி பட்டறையில், சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.


திருப்பூர்: வானவியல் சார் பயிற்சி பட்டறையில். சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா அக்டோபர் 4 முதல் 10 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் அக்டோபர் 7 அன்று அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வானவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம், நிலவின் முகங்கள், நட்சத்திர தொகுதிகளை எளிதில் அடையாளம் காணுதல், சூரிய கடிகாரம், பந்து கண்ணாடி மாயக்கண்ணாடி, ஓரிடத்தில் உள்ளூர் நண்பகல் நேரத்தை கணக்கிடுதல், சரியான திசைகளை சூரியனின் நிழலை வைத்து கணக்கிடுதல் என்பது போன்ற பல்வேறு வானவியல் சார் கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்வதற்கான எளிய பொருட்களைக் கொண்டு அறிவியல் சார் கருவிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்ய வழி காட்டப்பட்டது.



அது சார்ந்த வானவியல் சார் கருத்துக்களை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஜிவிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியும் கருத்தாளருமான ஹரிணி ஆகியோர் விளக்கிக் கூறினர். கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். உடுமலை உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.

குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தை பாதுகாக்க வேண்டியது நமது முக்கிய கடமை என்பதையும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். நிறைவாக கல்லூரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கீதாமணி நன்றி கூறினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...