உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 5 முதல் 12 -ம் தேதி வரையில் தகவல் அறியும் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை யொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா தொடங்கி வைத்தார். தமிழ் ஆசிரியர்கள் வே. சின்னராசு, ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...