உலக மனநல தினத்தை முன்னிட்டு Healboxx-ன் 'மன ஆரோக்கியம்' குறித்து விழிப்புணர்வு முகாம்

உலக மனநல தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மன ஆரோக்கியம் விழிப்புணர்வு முகாமில் 500க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருந்து பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: பயனாளர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் Healboxx செயலி மூலம் உளவியல் நிபுணர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று Healboxx செயலியின் நிறுவனர் நான்சி குரியன் கூறியுள்ளார்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு ஹீல்பாக்ஸ் 'மன ஆரோக்கியம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. இந்த முகாமானது, தற்கொலை எண்ணத்தைத் தடுக்கவும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்விலிருந்து அவர்களை பாதுகாக்க இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



தற்போதைய சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம் போலவே மனநலமும் முக்கியமானது. பலர் மனநலத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. சரியான வழிகாட்டுதலைப் பெறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை துயரத்துடன் முடித்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் பலர் ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் உள்ளனர்.

உளவியலாளர்களிடம் பேசுபவர்கள் குறைந்த மன அழுத்தத்தை கொண்டுள்ளனர். மேலும் அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாக உள்ளனர். கவனிக்கப்படாத மன அழுத்தத்தின் சிறிய அளவு தற்கொலை எண்ணத்திற்கு வழிவகுக்கும் என்பதை உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து, Healboxx செயலியின் நிறுவனர் நான்சி குரியன் மற்றும் இணை நிறுவனர் மேத்யூ குரியன் கூறுகையில், Healboxx தனி நபர்கள், தம்பதிகள், மாணவர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் தனிப்பட்ட முறையில் உளவியல் ஆலோசனை வழங்கும் செயலியாகும். Healboxx-ல் இணைந்துள்ள அனைத்து உளவியல் நிபுணர்களும் நன்கு பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்களாகும்.

பயனாளர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் Healboxx செயலி மூலம் உளவியல் நிபுணர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் Healboxx செயலி மூலம் மிக எளிதாக பயனாளர்கள் பயனடையுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஆலோசனையானது மனநிலையை மேம்படுத்தவும், மனநோய்க்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும், தகவல் தொடர்பு மற்றும் உறவுகளை மேம்படுத்தவும், சுயமரியாதை மற்றும் பின்னடைவை மேம்படுத்தவும் Healboxx செயலி உதவும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...