உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடுவோரின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்களும் விவசாயிகளும் வேண்டுகோள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்துக்கு 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் மற்றும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் நீராதாரமாக உள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு 4-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் காண்டூர் கால்வாயில் வரும் தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு முறையற்ற வகையில் குழாய் மற்றும் மோட்டார் அமைத்து திருடுவதாக பொதுப்பணித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருமூர்த்தி அணை மற்றும் சீர்மட்ட கால்வாய் பிரிவு உதவிப் பொறியாளர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில் கடந்த 6-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பிளாஸ்டிக் குழாய் மூலமாக காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருமூர்த்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தண்ணீர் திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து திருட்டுக்கு பயன்படுத்திய குழாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து காவல்துறையில் நாகராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதே போன்று கடந்த 7-ம் தேதி வளையபாளையத்திற்கு செல்லும் வரத்து கால்வாயில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரியினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் குழாய் அமைத்து தண்ணீர் திருட்டு நடைபெறுவது கண்டறியப்பட்டது.



அதன் பேரில் நடைபெற்ற விசாரணையில் நாகராஜ், செல்வராஜ், காந்திமதி, கஞ்சிமலை ஆகியோர் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.



அதன் பேரில் உதவி பொறியாளர் மாரிமுத்து தளி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை மேற்கொள்ளவும், மேலும் ரோந்து பணிக்கு செல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் அதிகாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...