வரும் 16ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் - தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் வரும் 16ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.


கோவை: சென்னையில் நடைபெறும் உண்ணாவிர போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில்துறையினர் கலந்து கொள்கிறார்கள் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது, கடந்தாண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் தமிழக முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். மின்வாரியம் அவர்களுக்கு தோன்றியது போல் மின் கட்டணத்தை உயர்த்தக்கோரி கேட்டார்கள்.

மின் ஆணையமும் அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அப்போது தமிழக அமைச்சரிடம் முறையிட்டோம். இப்படி மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையே இருக்காது என்று கூறினோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார்கள். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை காப்பாற்ற இந்த கூட்டமைப்பை தொடங்கினோம். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படவில்லை. நிலைக்கட்டணம் என்பது எந்த வகையிலும் சரியில்லை என்று எதிர்த்து வருகிறோம். மேலும், பீக் ஹவர் கட்டண உயர்வையும் எதிர்க்கிறோம்.

இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெறக்கோரி வலியுறுத்தி வருகிறோம். தொழில்துறை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ள நிலையில் இதனை மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எங்கள் மீது எந்த அரசியல் திணிப்பும் இல்லை. முதலமைச்சர் எங்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்சனைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில், 16ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில்துறையினர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டமைப்பின் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ரவீந்திரன், மணி, சவுந்திர குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...