கோவையில் டெங்கு ஒழிப்பு பணிகள் - மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

மழைக்காலம் தொடங்கயுள்ளநிலையில், கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: காந்திபுரம், ராம் நகர், காட்டூர், விவேகானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.



கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் டெங்கு வராமல் தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையாளரும் அப்போது பல்வேறு இடங்களில் இது குறித்த ஆய்வுகளை நேரடியாக சென்று மேற்கொண்டு வருகிறார். மாநகரில் பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி பகுதிகளான காந்திபுரம், ராம் நகர், காட்டூர், விவேகானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர்.



அப்போது அப்பகுதியில் பல்வேறு தெருக்களுக்குச் சென்ற அவர்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள், ட்ரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களிடம் எவ்வாறு டெங்குவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து எடுத்துரைத்தனர். மேலும் தேவையற்ற பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும், தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள் மற்றும் ட்ரம் உள்ளிட்டவற்றை முறையாக மூடி வைத்திருக்க வேண்டும் எனவும் புழுக்கள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் ஆய்விற்கு வரும்பொழுது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பணியாளர்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கேட்டு அறிந்து அதற்கான பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர்.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...