தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம் - உடுமலை மாநில நெடுஞ்சாலை மிக குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரத்தில் இருந்து உடுமலைக்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. கொண்டரசம்பாளையம், தளவாய்பட்டிணம், செலாம் பாளையம், ஊத்துப் பாளையம், சின்னக்காம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.

முக்கியதுவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை தாராபுரத்தில் இருந்து தளவாய்பட்டிணம் வரை சுமார் 10 கி.மீ. மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமாக உள்ளது.

இந்நிலையில் தினசரி இதன் வழியாக நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை சாலையில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ள சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத அளவுக்கு பாதை குறுகியே உள்ளது. அத்துடன் எதிரே வாகனங்கள் வழியில்லாமல் சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலையை விரிவுபடுத்த கோரி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தினசரி வாகன விபத்துகளில் சிக்கி உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்- உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...