கோவை துடியலூர் அருகே ரூ. 87 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் ஊராட்சியில் சுமார் 87 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


கோவை: முதல்வர் கிராம இணைப்பு சாலை திட்டத்தில் கீழ் வட்டமலைபாளையம் பிரிவு பகுதியில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கீழ் ரூபாய் 59 லட்சத்து 85 ஆயிரத்து 995 மதிப்பில் வி.கே.வி.நகர் பகுதியிலுள்ள லட்சுமி நகர் ஒரு பகுதி, சி.எஸ்.ஐ சர்ச் பகுதி, ஸ்ரீ நகர் சாலை ஆகிய இடங்கள் மற்றும் காந்தி காலனி அருகேயுள்ள ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், ஆடியபாரதம் வீதியில் வடிகால் அமைத்தல், அசோகபுரம் ஊராட்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி நிறுத்த இடம் அமைத்தல், ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு புதிய கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இதற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்புனர் வீரபத்ரன், ஒன்றிய துணை செயலாளர் அசோக், மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் குணசீலன், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், சதகத்துல்லா, வார்டு கவுன்சிலர்கள் நடராஜன், நாகராஜ் என்கிற ஸ்ரீராம், சுதா செல்வகுமார், பிரசன்னா ராணி, முருகம்மாள், கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், ராஜகோபால், சங்கர், வேணுகோபால், வர்கீஸ், சேகர், சிவபாதம், அப்துல்சாத்தாக், ஜெயகுமார், போஜராஜன், ஸ்ரீதர், பாரதி, சரவணகுமார், சுந்தரம், சரவணன், ஒன்றிய இளைஞர் அணியினர் நிர்மல்குமார், மணிகண்டன், சிவராஜ், ராம்குமார், பிரவீன்குமார், புஷ்பராஜ், காண்ட்ராக்டர்கள் சுரேஷ், வசந்த், ஏ.எஸ்.பி அன் கோ மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...