சீரான மின்சாரம் கேட்டு ஜல்லிப்பட்டி ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளை சார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.


திருப்பூர்: பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மனுவாக கொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி கிளைசார்பில் மின்விநியோத்தை முறைப்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி மனுகொடுக்கப்பட்டது. ஜல்லிபட்டி புதுக்காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகிறது.



தொடர்ச்சியாக தரமற்ற மின்விநியோகத்தால் லோவேல்டேஜில் மின்சாரம் வருவதால் பேன் மிக்சி கிரைண்டர் அயர்ன்பாக்ஸ் உட்பட வீட்டுமின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது. மேலும் மின்கம்பத்தில் மேல்நிலைக்கம்பிகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே சீரான மின்சாரம் வழங்கிடவும் மேல்நிலைகம்பிகளை பராமரித்து மக்ககளுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரி இந்தியஜனநாயக வாலிபர்சங்ம் சார்பில் பொதுமக்களிடம் நூற்றுக்கணக்கான கையெழுத்துபெற்று தளி மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனுகொடுத்து பேசப்பட்டது.



உடனடியாக சரிசெய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் DYFI உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, அஜித்குமார், சுரேஸ், சின்னகருப்புசாமி, கன்னிமுத்து, முருகேஸ் ரவி, கார்த்திக் உட்பட கிளைநிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...