கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வராமல் சென்ற 2 அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அபராதம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை அருகே பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளை நிறுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், மேம்பாலத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

ஒரு சில பேருந்துகள் கருமத்தம்பட்டியில் நிற்காது என்று கூறி பயணிகளை ஏற்ற மறுத்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் சூலூர் வட்டார போக்குவத்து அதிகாரி சண்முகசுந்தரம் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தின் வழியாக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தள்ளிச்சென்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது தெரியவந்தது.



உடனே சம்பந்தப்பட்ட அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்தார்.

மேலும் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...