100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த கோரிக்கை- கோவை அருகே பெண்கள் போராட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடத்த ஆர்ப்பாட்டத்தில் நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து கொண்டிருப்பதை கண்டித்தும் 100 நாள் வேலையை 200 நாளாக அமல்படுத்த கோரியும் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே வி தனபால் தலைமை தாங்கினார்.



கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ஆர் செல்வராஜ், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் R. கேசவ மணி அவர்களும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் கட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர் ஏ. ஆர்.துரைசாமி சுப்பிரமணியம் , கோகுல் கிருஷ்ணன் மற்றும் 77 விவசாயம் பெண் தொழிலாளர் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...