இ - பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரி உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் இ-பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரியும் உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருப்பூர்: வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ-பைலிங் நடைமுறை கொண்டு வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உடுமலை கச்சேரி வீதியில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2, மாவட்ட கூடுதல் 4-வது நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அது தவிர உடுமலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ- பைலிங் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

அந்த முடிவினை எதிர்த்தும், இ-பைலிங் நடைமுறையை 6 மாதகாலம் ஒத்திவைக்க கோரியும், அதற்குள் பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் உடுமலை வக்கீல் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் சிவராமன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், மூத்த, இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...