மாநில அளவிலான தடகள போட்டி - தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தகுதி

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் தாராபுரம் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்


திருப்பூர்: தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் நடைபெற்றது.

அதில் பல்லடத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் 5 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் மாணவர் அன்புச் செல்வன் ஈட்டி எறிதல் போட்டியில் 44.38 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடமும், மாணவர் தர்ஷன் 1.65 மீட்டர் உயரம் தாண்டி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற அன்பு செல்வன் மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் மாநில அளவில் தடகளப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரை பள்ளி தாளாளர் டாக்டர் தங்கராஜ், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சகமாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...