இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு - தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் கல்குவாரி மலையாக மாற்றும் கிறிஸ்தவ அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி மறுக்கபட்டது. இதனால் தாராபுரம் காவல் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்


திருப்பூர்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதிமறுத்ததால் தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் நடைபெற உள்ள இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு, அனுமதி மறுத்ததை கண்டித்து, காவல் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

சென்னிமலையை கல்குவாரி மலையாக மாற்றும் என கிறிஸ்தவ அமைப்பினர் கூறியதாகவும் அதை கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணியினர் அனுமதி கேட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு, அரசு அனுமதி அளிக்க மறுப்பதாக கூறி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் தவமணி பாலு, கதிரேசன் உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பினர், தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அனுமதி மறுத்ததை கண்டித்து தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல் நிலையத்தில் மீண்டும் மனு அளித்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...