வால்பாறையில் திமுக சார்பில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

திமுக சார்பில் வால்பாறையில் நடைபெற்ற தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில்,வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக சார்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், செயலாளர் ராம், துணைத் தலைவர் ராஜா மற்றும் வால்பாறை lpf சங்கம் வினோத் மற்றும் சவுந்திரபண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



வால்பாறையில் உள்ள ஆட்டோ, கார், வேன், லாரி ஓட்டுநர்கள் திமுக சார்பாக தொழிற்சங்கங்களில் இணைந்து ஓட்டுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நலத்திட்ட உதவிகள் வெளி மாநிலங்களில் சென்றால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் உறுப்பினர் அட்டை பெற்று அவர்களுக்கு தேவையான நல வாரியத்தின் மூலம் உதவிகளும் காப்பீடு திட்டங்களும் மருத்துவகாப்பீடு திட்டங்களும் செயல்படுத்தப்படுவோம் என்றும், வால்பாறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மேலும் வால்பாறையில் வாகனங்களை நிறுத்த அதற்கு இடமில்லாமல் உள்ளதால் வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தினால் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

வால்பாறையில் வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று வைத்தனர். சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் நாலாவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் பாஸ்கர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...