வால்பாறையில் திமுக சார்பில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

திமுக சார்பில் வால்பாறையில் நடைபெற்ற தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில்,வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக சார்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், செயலாளர் ராம், துணைத் தலைவர் ராஜா மற்றும் வால்பாறை lpf சங்கம் வினோத் மற்றும் சவுந்திரபண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



வால்பாறையில் உள்ள ஆட்டோ, கார், வேன், லாரி ஓட்டுநர்கள் திமுக சார்பாக தொழிற்சங்கங்களில் இணைந்து ஓட்டுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நலத்திட்ட உதவிகள் வெளி மாநிலங்களில் சென்றால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் உறுப்பினர் அட்டை பெற்று அவர்களுக்கு தேவையான நல வாரியத்தின் மூலம் உதவிகளும் காப்பீடு திட்டங்களும் மருத்துவகாப்பீடு திட்டங்களும் செயல்படுத்தப்படுவோம் என்றும், வால்பாறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மேலும் வால்பாறையில் வாகனங்களை நிறுத்த அதற்கு இடமில்லாமல் உள்ளதால் வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தினால் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

வால்பாறையில் வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று வைத்தனர். சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் நாலாவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் பாஸ்கர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...