தாராபுரத்தில் வரும் 29ம் தேதி மனைவி நல வேட்பு விழா - முன்பதிவு செய்ய அழைப்பு

தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டத்தில் வரும் 29ஆம் தேதி மனைவி நல வேட்பு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மனைவி நல வேட்பு விழாவில் 100- க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவுப்படுத்தி பேசலாம் என தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டம் அண்ணா நகரில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விழாவில் பெண்களின் பெருமையாக மனைவி நல வேட்பு விழா நடத்தப்பட உள்ளது.



விழா வருகின்ற 29-ந்தேதி தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் ஆழியார் உலக சமுதாய சேவா சங்கத்தின் விசன் இணை இயக்குனர் பேராசிரியர் அருட்செல்வி மனைவியின் மாண்பு பற்றியும், திருச்சி பேராசிரியர் நீலகண்டன் வாழ்வியலில் வேதாத்திரியம் என்கிற தலைப்பிலும் பேச உள்ளனர்.

மனைவி நல வேட்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவில் நிறுத்தி தியாகத்தின் திரு உருவமாம் மனைவியின் மாண்பைப் போற்றும் விழாவாக இந்த விழா அமைய உள்ளது. இதில் கலந்துகொண்டு பயன் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...