தாராபுரத்தில் அஞ்சல்துறை சார்பில் கடித போட்டி- கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற கடிதம் எழுதும் போட்டியில் தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: கல்லூரி மாணவிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்திய அஞ்சல் துறை 2023-24 நிதி ஆண்டிற்கான தேசிய அளவிலான தாய் அகர்‌ கடிதம் எழுதும் பிரச்சாரத்தை புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தாய் அகர் என்பது தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள (மகாராணி) தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தங்களுடைய கருத்துக்களை கடிதமாக எழுதி இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதினர்.



தாராபுரம் தலைமை தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்லேண்ட் லெட்டர் என்வெலப் போன்ற தபால்களை தலைமை தபால் நிலையத்தின் மூலம் Chief Postmaster General Chennai 600002 என்ற முகவரிக்கு அனுப்பினர்.



இந்நிகழ்ச்சியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் கடிதம் எழுதும் பணியை ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...