தாராபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான 87 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தாராபுரத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 175 ஆகும்.


திருப்பூர்: மோட்டார் வாகன வழக்குகள் 18, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 26, காசோலை வழக்கு 3, வங்கி வாராக்கடன் வழக்கு 2, உள்பட மொத்தம் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படி, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் குழவின் உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிக்குழு தலைவரும் மற்றும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார். குற்றவியல் நடுவர் எஸ்.பாபு முன்னிலை வகித்தார்.

அப்போது கடந்த 19.5.2022 தேதி சென்னிமலை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (42), மோட்டார் சைக்கிளில் சென்ற போது குண்டடம் அருகே கார் விபத்தில் இறந்தார். இதுதொடர்பாக அவருடைய மனைவி மற்றும் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் வாதாடி வந்தார்.

இதில் விபத்தில் இறந்து போன விஜயகுமாருக்கு ரூ.22 லட்சம் வழங்க நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டு அதற்கான ஆணையை மனைவி ஜெகதா மற்றும் தாயார் சின்னம்மாள் ஆகியோருக்கு முகாமில் வழங்கினார்.

இதில் மோட்டார் வாகன வழக்குகள் 18, உரிமையியல் வழக்கு 37, குற்றவியல் சிறு வழக்குகள் 26, காசோலை வழக்கு 3, வங்கி வாராக்கடன் வழக்கு 2, உள்பட மொத்தம் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 175 ஆகும். 325 பயணாளிகள், மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர். இதில் வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...