என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வருகை

இன்று தொடங்கும் பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வந்துள்ளார்.


கோவை: பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று காலை அவிநாசியிலும் மாலையில் மேட்டுப்பாளையத்திலும் நடைபெறவுள்ளது.

பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் மீண்டும் துவங்குகிறது. இதில் மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கலந்து கொள்ள உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...