வேலம்பட்டியில் விவசாய நிலத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு - அளவீடும் பணி பாதியிலேயே நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் வேலம்பட்டியில் விவசாயி நிலத்தில் அனுமதியின்றி சுங்கச்சாவடி அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: விவசாயின் நிலத்தில் அனுமதி இன்றி தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் வரை சுமார் 33 கிலோமீட்டர் அமைக்கப்பட்டுள்ள NH-381 என்ற தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசிபாளையம் அருகே வேலம்பட்டி என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கம் வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளதாகவும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடித்து அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடித்து அகற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் சுங்கச்சாவடியை இடித்து அகற்றாமலேயே சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து சுங்கம் வசூலிக்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள விவசாயி துரைசாமி என்பவர் பேக்கரி ஒன்றையும் நடத்தி வருகிறார். பேக்கரி முன்பு தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க இன்று அளவீட்டுப் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துரைசாமியையும், அவரது குடும்பத்தாரையும் சுங்கச்சாவடி மேலாளர் சிவசங்கர் என்பவர் மூலம் திட்ட இயக்குனர் செந்தில் என்பவர் தன்னை மிரட்டியதாகவும் தங்களது நிலத்தில் அனுமதி இன்றி தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி அளவீட்டு பணிக்காக வந்த அதிகாரிகளுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் மீறி அமைத்தால் இப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் தற்காலிக சுங்கச்சாவடி அமைப்பதற்கான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அளவீட்டு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...