தமிழ்நாடு வேளாண்‌ பல்கலையில்‌ புரதத்தின்‌ செயல்‌ திறனை கண்டறிவதற்கான நேரடி அனுபவ பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் "புரதத்தின்‌ செயல்திறனை கண்டறிவதற்கான புதுமையான தீர்வுகள்:‌ MALDI-TOF-MS” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள்‌ நேரடி அனுபவ பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


கோவை: புரதத்தின்‌ செயல்‌ திறனை கண்டறிவதற்கான நேரடி அனுபவ பயிற்சி வகுப்பில்‌ பல்வேறு கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ பங்கேற்று பயனடைந்தனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக உயிர்‌ தொழில்நுட்ப சிறப்பு மையத்தில்‌ “புரதத்தின்‌ செயல்திறனை கண்டறிவதற்கான புதுமையான தீர்வுகள்‌: MALDI-TOF-MS” என்ற தலைப்பில்‌ அக்டோபர்‌ 16 மற்றும்‌ 17, 2023 ஆகிய இரண்டு நாட்களில்‌ நேரடி அனுபவ பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில்‌ பல்வேறு கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ பங்கேற்று பயனடைந்தனர்‌.



இந்நிகழ்ச்சியின்‌ துவக்கவிழாவில்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக தாவர மூலக்கூறு மற்றும்‌ உயிர்‌ தகவலியல்‌ துறைத்‌ தலைவர்‌ முனைவர்‌ எ.ஜான்‌ ஜோயல்‌ வரவேற்புரையாற்றினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக தாவர மூலக்கூறு மற்றும்‌ உயிர்‌ தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர்‌ ந.செந்தில்‌ தனது துவக்கவுரையில்‌ புரதத்‌ தொகுதிகளை ஆய்வு செய்வதற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ வசதிகளை அனைத்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ உபயோகப்படுத்துவதற்கான சாத்தியக்‌ கூறுகளைப்‌ பற்றி எடுத்துரைத்தார்‌. மேலும்‌, உயிர்‌ தொழில்நுட்ப சிறப்பு மையத்தில்‌ உள்ள புரோடடியோமிக்ஸ்‌ மற்றும்‌ மெட்டபோலோமிக்ஸ்‌ ஆய்வக வசதியை பல்வேறு வேளாண்‌ நிறுவனங்கள்‌, தொழில்‌ முனைவோர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌ கூறினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக விதை மைய இயக்குநர்‌ முனைவர்‌ ஆர்‌.உமாராணி அவர்கள்‌ தனது முதன்மையுரையில்‌ பயிர்‌ மேம்பாட்டில்‌ மரபியல்‌ மற்றும்‌ மரபணு வரிசை முறை ஆய்வின்‌ முக்கியத்துவத்தைப்‌ பற்றி விளக்கினார்‌. மேலும்‌, புரோட்டியோமிக்ஸின்‌ மேம்பட்ட கருவிகளைப்‌ பயன்படுத்தி விதை மற்றும்‌ தானியங்களில்‌ உள்ள புரத உயிரி குறிப்பான்‌ (BIOMARKER) அடையாளம்‌ காண்பதன்‌ மூலம்‌ புரத வேறுபாட்டை மதிப்பிடலாம்‌ என்றும்‌ கூறினார்‌.

இறுதியாக, பேராசிரியர்‌ முனைவர்‌ சு.மோகன்குமார்‌ அவர்கள்‌ நன்றியுரையாற்றினார்‌. அதனைத்‌ தொடர்ந்து ஸ்பின்கோபயோடெக்‌ நிறுவனத்தின்‌ தொழில்நுட்ப வல்லுநர்கள்‌ து.வெங்கடேஷ்‌, பி.சுரவணன்‌ ஆகியோர்‌ மால்டிடாஃப்‌ ஆய்விற்கான மாதிரிகளை தயார்படுத்துவதற்கான நெறிமுறைகள்‌ மற்றும்‌ மென்பொருள்‌ செயல்பாடுகளைப்‌ பற்றி விளக்கினர்‌. மேலும்‌ மால்டிடா.'.ப்‌ இயந்திரத்தில்‌ மாதிரிகளை உட்செலுத்தும்‌ செயல்முறை விளக்கம்‌ பயிற்சி பெறுவோர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளின்‌ முடிவுகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பதனையும்‌ விளக்கிக்‌ கூறினார்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...