தடாகம் பகுதியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் - விற்பனை செய்த 5 நபர்கள் கைது

கோவை தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

கோவை: கோவையில் அதிரடி ஆய்வு நடத்திய விறபனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் பெரிய தடாகம் பிரிவு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் *மீனாட்சி சுந்தரம் (19), அடைக்கலம் மகன் சரத்குமார் (20), சக்தி மகன் சந்தோஷ்குமார் (19) மற்றும் முத்துராமலிங்கம் மகன் முத்துகிருஷ்ணன் (20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.



கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 507 நபர்கள் மீது 381 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 680.891 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள்* பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...