கோவையில் வரும் மார்ச் 26-யில் முன்னாள் படைவீரர் திரளணி

கோவை மாவட்டம், காளப்பட்டி சாலை, சிட்ரா அருகில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் முன்னாள் படைவீரர்கள் திரளணி நடைபெறவுள்ளது. 

அன்றைய தினம் காலை 8 மணியளவில் துவங்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தென்பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் கி.எம்.ஹரீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் போர் விதவையர் குறைகளை மனுக்களாக தெரிவித்து பயனடையலாம்.

இம்முகாமில், சென்னை இராணுவ மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாமும் நடைபெறும். இதில், பல்வேறு படை ஆவணகாப்பகங்கள், வங்கிகள், சென்னையில் உள்ள இராணுவ உதவி மையத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்கவுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருதல் அவசியம். 

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் படைவீரர் நல அலுவலகம் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...