உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நீட்டிப்பு

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து படுகை நான்காம் மண்டலப் பாசனப் பாலாறு பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கான பாசனத்திற்கு தண்ணீர் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கால நீட்டிப்பு செய்ய அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து 2023- 2024 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், படுகை நான்காம் மண்டலப் பாசனப் பாலாறு பகுதிகளுக்குட்பட்ட நிலங்களிலுள்ள. நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கூடுதலாக 18.10.2023 முதல் 24.10.2023 முடிய 6 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து, மொத்தம் 410 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட). தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 94068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். என தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...