வால்பாறையில் மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பேருந்து - சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார்

கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், உயர் அழுத்த மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கல்லூரி பேருந்து மோதிய மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த விபத்தால், வால்பாறை நகரமே இருளில் மூழ்கியது.



கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மேல் மோதியதில் கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் முன் கூட்டியே இறங்கியதால் பதிப்பு இல்லை. பேருந்து ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பினார். இந்த விபத்தின் காரணமாக இந்த வழியில் செல்ல கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து செல்ல முடியாமல் உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது.



இதன் காரணமாக நடுமலை, பச்சமலை, கருமலை, அக்காமலை, போன்ற எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி குழந்தைகள் நடந்து சென்று எதிரே வரும் வாகனத்தில் செல்கின்றனர்.



மின் கம்பதை அகற்றி போக்குவரத்தை சரி செய்வதற்கு காவல் துறையின் மின் துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...