மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, TAARK Equipment பிரைவேட் லிமிடெட் இடையே ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை: வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறை, புவிசார் பொறியியல் துறைகளின் சங்கம் துவக்க விழா மற்றும் TAARK Equipment பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் Oct 17 2023 அன்று பார்க் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

Dr. லக்ஷ்மணன், முதல்வர், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிடைக்கும் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த விழாவினை தலைமையேற்று நடத்திய பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தனது உரையில் 2020 ஆண்டு இந்த துறையின் முதல் சங்க துவக்க விழாவில் இந்தியாவின் நிலவு மனிதர் Dr. மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்க வேண்டும் என்றார். உயிரினங்கள் வாழ்வதற்கான மாசில்லா சுற்றுச்சூழல் உருவாக்க துணை நிற்க வேண்டும் என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் வேளாண் உபகரணங்கள் ஆராய்ச்சியிலும், பயன்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும் தனது உரையில் இந்தியாவுக்கான பணமா நாட்டின் தூதர் மற்றும் தூதரக ஜெனரல் யாசியேல் புரில்லோ, பனாமா நாட்டில் மரங்கள் வாழ்வதற்கு சட்ட உரிமை கொடுப்பதாகவும், நாமும் நமது நாட்டின் மரங்களை காக்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வருகை புரிந்த TAARK நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ண பிரசாத், வேளாண்மையில் ஆர்வம் கொண்டு வேளாண் பொறியியல் துறையில் பயிலும் மாணவர்களை வாழ்த்தினார்.

மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக TAARK நிறுவனம் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்கும் என்று கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...