மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, TAARK Equipment பிரைவேட் லிமிடெட் இடையே ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை: வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறை, புவிசார் பொறியியல் துறைகளின் சங்கம் துவக்க விழா மற்றும் TAARK Equipment பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் Oct 17 2023 அன்று பார்க் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

Dr. லக்ஷ்மணன், முதல்வர், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிடைக்கும் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த விழாவினை தலைமையேற்று நடத்திய பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தனது உரையில் 2020 ஆண்டு இந்த துறையின் முதல் சங்க துவக்க விழாவில் இந்தியாவின் நிலவு மனிதர் Dr. மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்க வேண்டும் என்றார். உயிரினங்கள் வாழ்வதற்கான மாசில்லா சுற்றுச்சூழல் உருவாக்க துணை நிற்க வேண்டும் என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் வேளாண் உபகரணங்கள் ஆராய்ச்சியிலும், பயன்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும் தனது உரையில் இந்தியாவுக்கான பணமா நாட்டின் தூதர் மற்றும் தூதரக ஜெனரல் யாசியேல் புரில்லோ, பனாமா நாட்டில் மரங்கள் வாழ்வதற்கு சட்ட உரிமை கொடுப்பதாகவும், நாமும் நமது நாட்டின் மரங்களை காக்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வருகை புரிந்த TAARK நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ண பிரசாத், வேளாண்மையில் ஆர்வம் கொண்டு வேளாண் பொறியியல் துறையில் பயிலும் மாணவர்களை வாழ்த்தினார்.

மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக TAARK நிறுவனம் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்கும் என்று கூறினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...