தாராபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை - குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


திருப்பூர்: குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரால், பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மெட்ரோ சிட்டி குடியிருப்பில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இது குறித்து 'மெட்ரோ சிட்டி' குடியிருப்போர் சங்க நிர்வாகி சிவசாமி கூறியதாவது, 'மெட்ரோ சிட்டி' குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிப்புப் பணிக்காக குழி தோண்டினர். குழாய் பதிக்கப்பட்ட பின் குழிகள் மூடப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக குழிகளில் தண்ணீர் தேங்கியதோடு, வீடுகளைசுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவுபோல காட்சியளிக்கிறது.



குடியிருப்புப் பகுதிக்குள் வர முடியாததால், பள்ளி வாகனங்கள் சற்று தொலைவிலேயே நிறுத்தப்படுகின்றன. தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று பள்ளி வாகனத்தில் ஏற வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் தலையிட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...