வலு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாணவன் சாதனை - விளையாட்டு வீரருக்கு அமைச்சர் கயல்விழி பாராட்டு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தாராபுரம் பகுதியைச் கல்லூரி மாணவன் முகமது சபீர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த மாணவன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை சந்தித்து ஆசி பெற்றார்.


திருப்பூர்: வலு தூக்கும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவனுக்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.



கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தாராபுரம் பகுதியைச் கல்லூரி மாணவன் முகமது சபீர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் ஓட்டுநர் இவரது இரண்டாவது மகன் முகமது சபீர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார். இவர் வலுதூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு பள்ளி படிப்பு காலத்திலேயே பல்வேறு போட்டிகளில் இளையோர் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் முதல் பரிசை வென்றுள்ளர்.

இதனிடையே கர்நாடகாவில் உள்ள வலுத்தூக்கும் அமைப்பு சார்பில் போட்டிகள் அக்டோபர் 12 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற மாணவர் முகமது சபீர் தேசிய அளவிலான பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து ஆசி பெற்றார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...