உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.


திருப்பூர்: தனி நடனம் , குழு நடனம் , இசைக்கருவிகள் வாசித்தல் ,பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி கலைத் திருவிழா மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல் காதர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் சரவணக்குமார் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்றைய கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



குறிப்பாக தனி நடனம், குழு நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



கலைத் திருவிழாவை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...