ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு

ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


கோவை: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாதாரண மக்கள் நிறைந்து வாழும் ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் பலமுறை கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்தோம். தற்போது சமுதாய நலக்கூடம் அமைத்திட ஏற்பாடு நடைபெறுவதாக தெரிய வருகிறது.

எனவே ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுத்து பேசப்பட்டது.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் கமிட்டி உறுப்பினர் சி.மாசாணி, அஜித் மற்றும் கருப்புசாமி, ரவிச்சந்திரன், சுரேஷ்குமார் மற்றும் மாதர் சங்கம் சார்பாக ஜல்லிப்பட்டி கிளை கிளைத்தலைவர் தெய்வானை, கமிட்டி உறுப்பினர் கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...