கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.



கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.



இக்கண்காட்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இதழாளர் – கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன், விழாக் குழு இணைத் தலைவர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழாக் குழு இணைத் தலைவர், பால்வளத்துறை மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்தார்.



இப்புகைப்படக் கண்காட்சியில் கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் கலைஞர், குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட தலைப்புகளில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.



இக்கண்காட்சி ஒரு மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், என்.ராம்(ஹிந்து நாளிதழ்), நக்கீரன் கோபால், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...