முருகன் பாடல், காவடி ஆட்டத்தை கண்டு ரசித்த தமிழக அமைச்சர்கள்

கோவை வ உ சி மைதானத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியில் ஒலித்த முருகன் பாடல் காவடி ஆட்டத்தை தமிழக அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: தெய்வீக பாடல்களையும், காவடி ஆட்டத்தையும் தமிழக அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை வஉசி மைதானத்தில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதழாளர் கலைஞர் குழுவின் சார்பில் கலைஞரின் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் புகைப்பட கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இன்றைய துவக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.



இந்நிலையில் பரதநாட்டிய நடனகுழுவினர் "சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா" என்ற பாடலுக்கு நடனமாடினர். தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க காவடி ஆட்டமும் ஆடினர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் புகைப்பட கண்காட்சியில் திடீரென முருகன் பாடல் பாடி,காவடி ஆட்டம் ஆடியது அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. இதனை அமைச்சர்களும் கண்டு ரசித்தனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...