முருகன் பாடல், காவடி ஆட்டத்தை கண்டு ரசித்த தமிழக அமைச்சர்கள்

கோவை வ உ சி மைதானத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியில் ஒலித்த முருகன் பாடல் காவடி ஆட்டத்தை தமிழக அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: தெய்வீக பாடல்களையும், காவடி ஆட்டத்தையும் தமிழக அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை வஉசி மைதானத்தில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதழாளர் கலைஞர் குழுவின் சார்பில் கலைஞரின் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் புகைப்பட கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இன்றைய துவக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.



இந்நிலையில் பரதநாட்டிய நடனகுழுவினர் "சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா" என்ற பாடலுக்கு நடனமாடினர். தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க காவடி ஆட்டமும் ஆடினர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் புகைப்பட கண்காட்சியில் திடீரென முருகன் பாடல் பாடி,காவடி ஆட்டம் ஆடியது அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. இதனை அமைச்சர்களும் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...