கேரளாவில் நடைபெற்ற தேசிய ஹாண்ட்பால் போட்டி - கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சேம்பியன்

கேரளாவில் நடந்த இந்திய அளவிலான ஹாண்ட்பால் போட்டியில் கோவை கற்பகம் பல்கலைக்கழகம் அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.


கோவை: .வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி, பதிவாளர் முனைவர் பழனிசாமி ,உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினார்.

கடந்த 14-15ஆம் தேதி அகில இந்திய அளவிலான ஹாண்ட்பால் போட்டி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் 16க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. முதல் போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும், DSA SPORTS HOSTEL திருவனந்தபுரம் அணியும் எதிர்கொண்டன. இதில் 27 - 22 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது.

முதல் காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் MEG ARMY பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் 28-25 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது. அரை இறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணியும் MASTER CLUB போர்ட் கொச்சி அணியை எதிர்கொண்டது. இதில் 35-20 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக கோவை அணி வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணியும் SACRED HEART College, தேவாரம் கேரளா அணியை எதிர்கொண்டது. இதில் 39- 36 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி பதிவாளர் முனைவர் பழனிசாமி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர், பயிற்சியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...