உடுமலையில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா- ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன


திருப்பூர்: மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் கலைத்திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 18 ந்தேதி முதல் நாளை வரை நடைபெற்று வருகிறது. நேற்று 11 -12 வகுப்புகளுக்கும் இன்று 9 -10 வகுப்புகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை 6, 7, 8 வகுப்புகளுக்கும் கலைத் விழா போட்டிகள் நடக்கிறது.

மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் போட்டிகளில் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.



பள்ளி அளவில் சுமார் 400 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் பள்ளியளவில் முதலிடம் பெற்ற சுமார் 200 மாணவியர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.



இன்று நடைபெறும் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கான போட்டிகளில் மொத்தமாக 74 மாணவியர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் ஆசிரியர்கள் த வே சின்னராசு, ஆர் ராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியை வை.விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...