நாளை திறப்புவிழா காண்கிறது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்: முதலமைச்சர் பங்கேற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக அவ்வளாகத்தில் காலியாக இருந்த இடம் ஒதுக்கப்பட்டு, அதில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், புதிய கட்டிடத்திற்கா சுமார் 20.18 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்றன. 

கட்டிடம் முழுதாக கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் தமிழக அரசியல் காரணங்களால் திறப்புவிழா நடத்த காலதாமதமானது.  இந்த நிலையில், நாளை புதிய கட்டிடம் திறக்கப்ப்ட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாளை காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கும் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அவருடன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தமிழக அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 



விழா முடிந்ததும் கொடீசியா அரங்கத்திற்கு செல்லும் முதலமைச்சர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைப்பதோடு, 6 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட் உதவிகள் வழங்க உள்ளார்.

முதலமைச்சர் கோவை வருகையை ஒட்டி கோவை தொழில் முனைவோர் சங்கங்களின் சார்பில் முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...