கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் - தமிழிசை வேதனை

இளைஞர்களுக்கு படிக்கும் போதே அரசியல் தேவை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கோவையில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆண்களை விட அதிக அரசியலை செய்த காரணத்தினால் இன்று ஆளுநராக உயர்ந்திருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு.

கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கல்லூரி மாணவர்களிடையே அரை மணி நேரம் அரசியலைப் பற்றி உரையாற்றினார்.



அப்போது பேசிய அவர், கடுமையான பணி சூழ்நிலையிலும் ஏன் இங்கு வந்தேன் என்றால் பாலிடிக்ஸ் என்பது எனக்கு பிடிக்கும், இந்த இடத்தில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் தலைப்பே அரசியலை பற்றிதான். பொலிடிக்கல் அறிவியல் என்பது நாட்டிற்கு உபயோகமான ஒரு ஒரு சப்ஜெக்ட். அரசியல் இல்லாத இடமே கிடையாது.

இளைஞர்களுக்கு படிக்கும்போது அரசியல் தேவை என்பதுதான் எனது அழுத்தமான கருத்து. இது யாரு என்ன சொன்னாலும் மறுக்க முடியாது நேர்மறையான அரசியல் தேவை. தற்போது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எதிர்மறையான கருத்துக்களை சொல்ல வேண்டியதென்றால் மாணவர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் போராட்டம் நடத்தி மாணவர்களை பகடிக்காயாக பயன்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். ஆனால் அவர்கள் தலைவராக வருவதை நான் வரவேற்கிறேன்.

பிரதமர் உலகத்தில் எங்கே போனாலும் தமிழ் மொழியை சொல்லிவிட்டு தான் அவர் பெருமையை பேசுகிறார் அவர் தமிழுக்கு பங்கம் விளைப்பாரா? இந்தியாவில் திருக்குறளை பிரதமர் மேற்கோள் காட்டியுள்ளார். தமிழ் மொழியை அவர் கையாண்டதற்கு நாம் யாரும் அவரை பாராட்டவில்லை. பெரும்புள்ளிகளாக மாணவர்களும் வரவேண்டும். கட்டு கட்டாக வைத்திருப்பவர்களுக்கு தான் அரசியல் என்பதும், மற்றவர்களுக்கு அரசியல் இல்லை என்ற ஒரு எண்ணம் வந்து கொண்டிருக்கிறது.

அதே போல கத்தி கத்தி பேசுபவர்களுக்கு அரசியல் இல்லை, கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசியல் என்ற சூழ்நிலை வந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாமல் சிறப்பான ஒரு சூழ்நிலையை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும் என்பது அல்ல, அரசியல் சார்ந்த கருத்துக்களை எழுதலாம், தூய்மையான அரசியல்வாதிகளுக்கு உதவலாம்.

பெண்களுக்கு 33 சதவீதம், சட்டமன்றத்தையும் பாராளுமன்றத்தையும் அலங்கரிப்பவர்கள் இவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் அதனால் தான் பெண்களுக்கு அரசியல் வேண்டும். ஆண்களை விட அதிகமாக அரசியல் செய்ததால் ஆளுநராக நிற்கிறேன். அரசியல் வாரிசாக இருந்தால் உங்களை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும், நீங்களே நேரடியாக கட்சி அல்லது ஒரு சமுதாய அமைப்புக்கு வந்தால் பல சவால்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த துணிச்சலையை மட்டும் விட்டு விடக்கூடாது என தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...