கோழிப்பண்ணையில் பணியாற்றிய ஆறு சிறுவர்கள் அதிரடியாக மீட்பு

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் சிறார்கள் பணியாற்றுவதுவதாக புகார் வந்ததை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வு மேற்கொண்டதில் 6-சிறார்களை மீட்கப்பட்டனர்.


திருப்பூர்: குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பெல்லம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 6-குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களின் குழந்தைகள் அதேபண்ணையில் பணியாற்றுவதாக 1098-எண்ணுக்கு புகார் வந்தது இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மையம் அலுவலர்கள் மற்றும் குண்டடம் போலீசார் அங்கு கள ஆய்வு செய்தனர் அதில் 13-வயது முதல் 17-வயது வரை உள்ள 6-சிறார்கள் கடந்த 2 -மாத காலமாக பணியாற்றிவந்தது தெரியவந்ததை உறுதி செய்தனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.280 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறார்களை மீட்ட காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தாய்மொழி பள்ளிகள் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர் இதையடுத்து குடும்பத்தினர் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...