விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு போலி இன்சூரன்ஸ் - ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி புகார்

திருப்பூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் காப்பீடு வைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் புகார் அளித்துள்ளார்.


கோவை: போலியாக இன்சூரன்ஸ் தயாரிக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் காப்பீடு வைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அதிகாரி அருண்குமார் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இன்சூரன்ஸ் அதிகாரி அருண் குமார், திருப்பூர் மாவட்டம் தெற்கு காவல் காவல் நிலையம் எல்லைகுட்பட்ட பகுதியில் விபத்து நடைபெற்றது. விபத்தில் 33 வயது பெண் சாலையை கடக்கும் போது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இது தொடர்பாக இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் பரிசோதிக்கும் போது விபத்து ஏற்படுத்திய வாகனம் போலியாக இன்சூரன்ஸ் தயாரித்துள்ளது.ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் அந்த வாகனத்திற்கு எந்த விதமான இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை. ஆனால் அந்த வாகனத்தில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸில் காப்பீடு போட்டதாக பதிவுகள் உள்ளது.

இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிப்பதினால் விபத்தில் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்க முடியாது எனவும், இதுபோல் போலியாக இன்சூரன்ஸ் தயாரிக்கும் நபர்கள் மீது காவல்துறையை வழக்கு பதிவு செய்து அவர்கள் தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு தற்போது எந்தவிதமான நிவாரணம் அளிக்க முடியவில்லை. பொதுமக்கள் சரியான முகவரிகளிடம் இன்சூரன்ஸ் காப்பீடு போடுமாறு வலியுறுத்தினார். இது குறித்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரிடம் கேட்கும்போது அவரும் ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் வாகனம் சட்டப்படி உரிய ஆவணங்கள் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இழப்பீடு வழங்கப்படாத மாட்டாது என்று கூறினார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...