மின்பாதை அருகே மரக்கிளைகளை அகற்றும் பணி - வால்பாறை பகுதிகளில் நாளை மின்தடை

வால்பாறை பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சாரத்துறை அறிவித்துள்ளது.


கோவை: மின் பாதையில் அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடைபெறுவதால் அய்யர் பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்கு முடி, தாய் முடி, சேக்கல்முடி உட்பட பல்வேறு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை வால்பாறை வட்ட பகுதிக்கான அய்யர் பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்கு முடி, தாய் முடி, சேக்கல்முடி, சின்னகல்லார், பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், குரங்குமுடி, வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். அன்னாளில் மின் பாதையில் அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கேட்டு கொள்ளப்படுகிறது,என்று மின்சார துறை அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...