பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றியவரின் கடைக்கு சீல் வைப்பு - திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு இடத்தில் அமர்ந்ததற்காக பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கடைக்கு உதவி ஆணையர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.


 திருப்பூர்: சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது.



ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் ஆவின் என்ற பெயரில் உள்ள பேக்கரி முன்பாக அமர்ந்திருந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.



ஏற்கனவே கடையின் வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில் கடையின் வழித்தடத்தில் அமர்ந்திருந்ததாக குற்றம் சாட்டிஅந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றியது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அவமரியாதையாக பேசி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.



இச்ச சம்பவத்தால் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...