கோவையில் ரயிலில் ஹெராயின் கடத்தி வந்த வாலிபர் கைது - ரூ.5.6 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

கோவையில் அசாம் திப்ருகார்–கன்னியாகுமரி ரயிலில் ரூ.5.6 லட்சம் மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கோவை: யிலில் ஹெராயினை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவையில் கோவை ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுபாப்பு படை போலீசார், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து கோவை வரும் ரயில்களில் சிறப்பு சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து கோவை வந்த அசாம் திப்ருகார்–கன்னியாகுமரி ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகம்படும் படி இருந்த வாலிபரை பிடித்து, அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் ரூ.5.6 லட்சம் மதிப்பிலான, 70 கிராம் ஹெராயின் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் அசாமை சேர்ந்த வாசிம் அக்ரம்(23) என்பதும், அசாமில் இருந்து கேரளாவிற்கு ஹெராயினை கடத்தி செல்வதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹெராயினை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...